குழந்தை வரம் விரைவில் கிடைக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

0
95
#image_title

குழந்தை வரம் விரைவில் கிடைக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

நம் அனைவருக்கு குழந்தைகள் என்றால் அலாதி பிரியம். குழந்தை உள்ள வீட்டில் தெய்வம் குடி இருப்பார். வீட்டில் சந்தோசம் நிலைத்து இருக்கும். இப்படிப்பட்ட குழந்தை பாக்கியம்.
கடவுள் கொடுக்கும் வரங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த வரம் ஒரு சில தம்பதிக்கு கிடைக்க சற்று கால தாமதம் ஆகும். அவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்படுள்ள ஆன்மீக வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

பித்தளை தட்டு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, அகல் விளக்கு, நெய், திரி.

பரிகாரம் செய்யும் முறை:-

ஒரு பித்தளைத் தட்டில் மஞ்சள் குங்குமம் வைத்து அதன் மீது ஒரு வெற்றிலை வைக்கவும். அடுத்து ஒரு அகல் விளக்கில் மஞ்சள், குங்குமம் வைத்து வெற்றிலை மீது வைக்கவும். பின்னர் விளக்கில் நெய் ஊற்றி “கர்ப்பரக்ஷாம்பிகை தேவி” யை மனதார நினைத்து குழந்தை வரம் வேண்டி தீபம் ஏற்ற வேண்டும்.

விளக்கிற்கு கீழ் வைத்துள்ள வெற்றிலையின் காம்பு நமக்கு வலது பக்கமாக இருக்க வேண்டும். விளக்கு ஏற்றிய உடன்..

ஸ்லோகம்:

“ஓம் கர்ப்ப ரஷாம்பிகாயை ச வித்மஹே

மங்கள தேவதாயை ச தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத”

இந்த ஸ்லோகத்தை 108 முறை உச்சரித்து பின் தூப தீபம் காட்டி மனதார வேண்டிக் கொள்ளவும்.

இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு, தினமும் காலை குளித்தவுடன் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு சொல்ல வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல பலன் உண்டாகும்.