வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

0
64
#image_title

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

இன்றைய காலத்தில் பணம் இல்லையென்றால் வாழ்க்கையை நகர்த்துவது கஷ்டம். எதற்குமே பணம் இருந்தால் தான் வேலை ஆகும். நம்மிடம் பணம் இருந்தால் தான் உறவினர்களே நம்மை மதிப்பார்கள். தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது. இந்நிலையில் இந்த பணத்தை பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்.

செல்வ செழிப்போடு வாழ எளிய பரிகாரம்:-

தேவையான பொருட்கள்:-

*பாத்திரம்

*தண்ணீர்

*பன்னீர்

*மஞ்சள் தூள்

*தங்க காசு அல்லது ஒரு ரூபாய் நாணயம்

*மல்லிகைப் பூ

பரிகாரம் செய்யும் முறை…

இந்த பரிகாரத்தை வளர்பிறை நாள் அன்று செய்ய வேண்டும். முதலில் வீட்டில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும்.

பின்னர் வீட்டில் யாரும் புழங்காத பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் எச்சில் படாத தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின்னர் அதில் ஐந்து துளி பன்னீர் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்ததாக தங்கம் காசு இருந்தால் அதில் சேர்த்து கொள்ளலாம். இல்லாத பட்சத்தில் 1 ரூபாய் நாணயம் 8 என்ற எணிக்கையில் எடுத்து அந்த பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

தொடர்ந்து வாசனை நிறைந்த மல்லிகை பூ சிறிதளவு எடுத்து அந்த பாத்திரத்தின் மேல் வைத்து “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும்.

அதேபோல் “ஓம் குபேர லட்சுமி நமஹ” என்ற மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும்.
பின்னர் அந்த தண்ணீரை எடுத்து வைத்துள்ள மல்லிகைப் பூவுடன் சேர்த்து வீட்டில் பணம், செல்வம் இருக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் செல்வத்தை அள்ளி கொடுக்கும் மகா லட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதனால் வீட்டில் பணம் பெருக தொடங்கி செல்வ செழிப்புடன் வாழ ஆரமிப்போம்.