ஒரே வாரத்தில் தழும்பு மற்றும் பருக்கள் நீங்க ஈஸி டிப்ஸ்!! 100% கட்டாயம் மறையும்!!

0
80
#image_title

ஒரே வாரத்தில் தழும்பு மற்றும் பருக்கள் நீங்க ஈஸி டிப்ஸ்!! 100% கட்டாயம் மறையும்!!

முகத்தில் பருக்கள் வந்த பிறகு இந்த பருக்கள் பலவிதமான பிரச்சனைகளை தரும். பருக்களால் நம் முகத்தில் தழும்புகள் ஏற்படும். முகம் பொலிவாக இருக்காது. முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றும். இந்த பிரச்சனைகளை சரி செய்ய இந்த பதிவில் கூறப்படும் இரண்டு மருத்துவ முறைகளை வைத்து குணமாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

 

முதல் மருத்துவ முறை…

 

முதலில் சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு ஸ்பூன் தேன் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதை முகத்தில் பருக்கள் இருக்கும் பகுதியில் தேய்க்க வேண்டும்.

 

முகத்தில் பருக்கள் இருந்தால் இதை ஒரு நிமிடம் லேசாக தேய்த்து விட வேண்டும். முகத்தில் பருக்கள் இல்லை என்றால் 2லிருந்து 3 நிமிடம் இதை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவ வேண்டும்.

 

இதை பயன்படுத்தும் பொழுது முகம் பொலிவு பெறும். முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும்.

 

இரண்டாவது வைத்திய முறை…

 

இதை செய்ய ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் காபி தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு கலக்கி கொள்ள வேண்டும். பிறகு இதை நம் முகத்தில் தேய்க்க வேண்டும். முதல் மருத்துவ முறையை செய்து முடித்த பிறகு இந்த வைத்திய முறையை செய்ய வேண்டும்.

 

இதை கலக்கும் பொழுது பேஸ்ட் அல்லது கிரீம் பதத்திற்கு வரும். அவ்வாறு கிரீம் பதத்திற்கு வந்த பிறகு இதை முகத்தில் தேய்த்து விடவேண்டும்.  தேய்த்த பிறகு 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை செய்தால் உங்கள் முகம் அதிகளவு பொலிவு பெறும்.

 

இந்த இரண்டாவது வைத்திய முறையை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்யலாம். அதுவே முதல் வைத்திய முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும். இதை செய்யும் பொழுது பருக்கள், கரும்புள்ளிகள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் அனைத்தும் மறையும்.