உங்களுக்கு வயிறு பிடிப்பு பிரச்சனை இருக்கா? 5 நிமிடத்தில் குணமாக இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

0
298
Do you have stomach problems? Drink a glass of this drink to heal in 5 minutes!!
Do you have stomach problems? Drink a glass of this drink to heal in 5 minutes!!

உங்களுக்கு வயிறு பிடிப்பு பிரச்சனை இருக்கா? 5 நிமிடத்தில் குணமாக இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

உடலில் மார்பிற்கு கீழ் இடுப்பு பகுதிக்கு மேல் ஒருவித வலி ஏற்படுவதை தான் வயிறு பிடிப்பு என்கிறோம்.இந்த வயிறு பிடிப்பு அனைவருக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் ஒன்றாகும்.

வயிறு பிடிப்பிற்கான அறிகுறிகள்:-

1)அஜீரணக் கோளாறு
2)மலச்சிக்கல்
3)வயிற்றுப்போக்கு
4)நெஞ்செரிச்சல்
5)காய்ச்சல்
6)வாந்தி
7)பசியின்மை
8)எடை இழப்பு

இந்த வயிறு பிடிப்பு பாதிப்பு வயிறு,சிறுநீரகம்,கணையம்,கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளுடன் தொடர்புடையது.நீங்கள் சாப்பிட உணவு புட் பாய்சன் ஆகிவிட்டால் வயிறு வீங்குதல்,வயிற்றுப்போக்கு,வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.அடிக்கடி வயிறு பிடிப்பு ஏற்பட்டால் அவை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.எனவே வயிறு பிடிப்பு பாதிப்பை அலட்சியம் கொள்ளாமல் விரைவில் குணமாக்கி கொள்வது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – 1
2)முருங்கை இலை – 1/4 கப்
3)பூண்டு – 4 பற்கள்
4)தண்ணீர் – 150 மில்லி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி கிள்ளி போடவும்.

அதன் பின்னர் 1/4 கப் சுத்தம் அளவு செய்த முருங்கை இலைகளை அதில் சேர்க்கவும்.பின்னர் 4 பல் பூண்டை தோல் நீக்கி அதில் சேர்த்து மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் வயிறு பிடிப்பு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)சமையல் சோடா – 1/4 தேக்கரண்டி
2)எலுமிச்சை – 1
3)தண்ணீர் – 1 கிளாஸ்

செய்முறை:-

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிளாஸிற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலக்கவும்.

அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி சமையல் சோடா எடுத்து எலுமிச்சை நீரில் கலந்து பருகவும்.இவ்வாறு செய்து வந்தால் வயிறு பிடிப்பு முழுமையாக குணமாகும்.அதேபோல் நான்கு அல்லது ஐந்து புதினா இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் வயிறு பிடிப்பு முழுமையாக குணமாகும்.