கபம் பிரச்சனையால் தினமும் அவதியா!!? அதை சரி செய்ய ஓமவள்ளி இலையை இவ்வாறு பயன்படுத்துங்க!!!

0
37
#image_title

கபம் பிரச்சனையால் தினமும் அவதியா!!? அதை சரி செய்ய ஓமவள்ளி இலையை இவ்வாறு பயன்படுத்துங்க!!!

நமக்கு இருக்கும் கபம் பிரச்சனையை சரி செய்ய ஓமவள்ளி இலையுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம். அந்த சில பொருட்கள் என்ன எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
ஓமவள்ளி இலையில் பலவிதமான மருத்துவ குணங்கள் உள்ளது. உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றது. ஓமவள்ளி இலையில் அதிகளவில் ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் உள்ளது.  மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின்  சி சத்துக்கள் உள்ளது.
ஓமவள்ளி இலையை பயன்படுத்தி தலைவலி, ஜலதோஷம் போன்றவற்றை குணப்படுத்தலாம். மேலும் ஓமவள்ளி இலையை சருமத்திற்கு பயன்படுத்தி சருமத்தை பொலிவுறச் செய்யலாம். இப்பொழுது ஓமவள்ளி இலையை பயன்படுத்தி எவ்வாறு கபம் பிரச்சனையை சரி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
கபம் பிரச்சனையை குணப்படுத்தும் மருந்துக்கு தேவையான பொருட்கள்…
* ஓமவள்ளி இலைகள்
* ஏலக்காய்
* கிராம்பு
* தேன்
தயார் செய்யும் முறை…
முதலில் ஓமவள்ளி இலைகளை எடுத்து சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளை வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் அரைத்த இந்த ஓமவள்ளி விழுதை சேர்த்து நன்கு குதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் இதில் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து குதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொள்ளை வேண்டும். இதோ கபம். பிரச்சனையை குணப்படுத்தும் மருந்து தயாராகிவிட்டது.
இதை தினமும் காலை மாலை என்று இரண்டு வேளை குடிக்க வேண்டும். இதை தவிர்த்து மூன்று நாட்கள் தயார் செய்து குடித்து வந்தால் கபம் பிரச்சனை குணமாகும்.