காலையில் சிக்கல் இல்லாமல் காலை கடனை கழிக்க வேண்டுமா!!! அப்போ இதை இரவு தூங்கச் செல்லும் முன்பு குடிங்க!!! 

0
59
#image_title

காலையில் சிக்கல் இல்லாமல் காலை கடனை கழிக்க வேண்டுமா!!! அப்போ இதை இரவு தூங்கச் செல்லும் முன்பு குடிங்க!!!

காலை நேரத்தில் சிக்கலே இல்லாமல் காலை கடனை கழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் வழிமுறையை செய்து பாருங்கள். சிக்கல் இல்லாமல் காலைக் கடன் முடிந்து விடும்.

மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனை ஆகும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு கடுக்காய் உதவியாக இருக்கும். கடுக்காயில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச் சத்துக்கள் இருக்கின்றது.

இந்த கடுக்காயை எவ்வாறு மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த கடுக்காயின் மற்ற பயன்கள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கலை குணப்படுத்த கடுக்காய் பயன்படுத்தும் முறை…

* மலச்சிக்கல் குணப்படுத்த கடுக்காயை வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் இதை பொடியாக்கி கொள்ள வேண்டும். இல்லை எனில் நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் பொடி கிடைக்கும் அதை வாங்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் இந்த பொடியை இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரில் குடித்து வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். மேலும் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றது.

கடுக்காய் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்…

* கடுக்காய் நமது வாயிலும், தொண்டையிலும் ஏற்படும் புண்களை இனச் செய்யும்.

* கடுக்காய் நமது குடலில் இருக்கும் எரிச்சல், புண்களை ஆற வைத்து வலிமை அளிக்கும்.

* மேற்கூறியபடி மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும்.

* கடுக்காய் நமக்கு பசி உணர்வை தூண்டி விடும்.

* கடுக்காய் நமது இரத்தத்தை சுத்திகரிக்க உதவி செய்யும்.

* சர்க்கரை நோய் உள்ளவர்கள் கடுக்காயை பயன்படுத்தினால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

* காதில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த கடுக்காய் பயன்படுத்தப் படுகின்றது.

* மஞ்சள் காமாலை நோய்க்கு கடுக்காய் சிறப்பான மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

* கடுக்காய் பற்களில்உள்ள ஈறுகளை பலப்படுத்துகின்றது.