உடல் எடை அதிகரிக்க வேண்டுமா! இதனை மட்டும் செய்தால் போதும்!

0
299

உடல் எடை அதிகரிக்க வேண்டுமா! இதனை மட்டும் செய்தால் போதும்!

பெரும்பாலும் உடல் எடையை குறைப்பதற்காக என்ன செய்யலாம் என்று அதற்கான வழிமுறைகளை செய்து கொண்டிருப்பவர்களைப் போலவே உடல் பருமனை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று பல்வேறு புத்தகங்களை பயன்படுத்தி தேடி கொண்டிருப்பவர்களும் உள்ளனர். அந்த வகையில் உடல் பருமனை எவ்வாறு அதிகரிப்பது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

தேவையான பொருட்கள்:

நெய் , ஊற வைத்த ஜவ்வரிசி ஒரு கப், 100 கிராம் அளவிற்கு ஏலக்காய், முந்திரி, திராட்சை மற்றும் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள திராட்சை, முந்திரி அனைத்தையும் ஒரு பவுலில் எடுத்து வைக்க வேண்டும். ஏலக்காயில் உள்ள விதையை மற்றும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் நாம் எடுத்து வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து அதனுடன் ஏலக்காய், முந்திரி ,திராட்சை போன்றவற்றை போட வேண்டும்.

நன்கு கொதித்த உடன் நாம் எடுத்து வைத்துள்ள பாலை ஊற்ற வேண்டும். அதனுடன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பொருட்கள் அனைத்தும் நன்கு கொதிக்கும் வரை நாம் கிளறி விட வேண்டும். அதன் பிறகு ஜவ்வரிசி வென்றதும் இறக்கி அதனை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளலாம்.

வாரத்தில் மூன்று முறை இவ்வாறு செய்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். இவை கிட்டத்தட்ட பாயாசம் போலவே இருக்கும் ஆனால் இதில் நாம் சர்க்கரை ஒரு டீஸ்பூன் அளவு மட்டும் சேர்ப்பதால் இனிப்பு சுவை இருக்காது. மேலும் உடல் எடை உடனே அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் மூன்று முறை கட்டாயம் இதனை செய்து குடித்து வர வேண்டும்.

author avatar
Parthipan K