உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்யுங்கள்..!!

0
172
#image_title

உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்யுங்கள்..!!

நம் குலதெய்வத்தின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்தால் தான் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வந்தால் குலதெய்வ மனம் குளிர்ந்து நமக்கு வேண்டிய அனைத்தையும் செய்யும். நீங்கள் வைக்கும் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும்.

பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்வது சிறப்பான ஒன்றாக இருக்கும். முக்கியமான விசேஷ நாட்களில் குலதெய்வ கோயிலுக்கு செல்கிறீர்கள் என்றால் வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்டு பின்பு குலதெய்வ கோயிலுக்கு செல்லவும்.

கோயிலில் இருந்து வீடு திருப்பும் பொழுது கோயில் மண் சிறிதளவு எடுத்து வரவும். நாம் எடுக்கும் மண் யார் பாதமும் படாத இடத்தில் உள்ளவையாக இருக்க வேண்டும். வீட்டிற்கு வந்ததும் அதை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்து தூப தீபம் காட்டி வழிபடவும்.
அதேபோல் இன்னொரு துணியில் சிறிது முடிந்து வீட்டின் நிலை வாசலின் நடுவில் கட்டி விடவும். அடுத்த முறை கோயிலுக்கு செல்லும் போது இதே போல் மண் கொண்டு வந்து வைத்து வழிபடவும். பழைய மண்ணை செடி அருகில் கொட்டி விடவும். இதை ஒருமுறை செய்து பாருங்கள் நிச்சயம் வீட்டிலும் உங்கள் வாழ்விலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

வெல்லம் வாங்கி குலதெய்வ கொடுக்கலாம். இந்த வெல்லத்தை நம் வீட்டில் ஓர் இரவு வைத்து இருந்து பின் எடுத்து செல்வது சிறப்பு.