இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க!! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாக இருக்கலாம் குணமாக ஈஸி டிப்ஸ்!!

0
34

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க!! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாக இருக்கலாம் குணமாக ஈஸி டிப்ஸ்!!

நரம்பு தளர்ச்சி கை நடுக்கம் பாத பதபதப்பு நரம்பு வீக்கம் 10 நாளில் குணமடையும்.

நரம்பு தளர்ச்சியடைதால் ஏற்படும் நடுக்கம் தான், உடல் நடுக்கம் என அறியப்படுகிறது. ஆனால் இதற்கு முக்கிய காரணம் மூளைதான். எப்போதெல்லாம் மூளையின் கட்டளைகள் நரம்பிற்க்கு செல்லுவதில் தடைபடுகின்றதோ, அதைதான் நரம்பு தளர்ச்சி என்று கூறுகின்றனர்.

நரம்பு தளர்ச்சி ஏற்படுவதன் காரணம்:

நாள்பட்ட சோர்வு, மனநிலை குறைவு, பயம், பதட்டம், அதிகபட்ச சிந்தனை இவ்வித பிரட்சனைகள் நரம்பு பலவீனத்தின் அறிகுறிகளாகும்.

இதை நீக்கும் வழிகள் நமது உணவில் அதிகபட்சம் இருக்கின்றது. சரியான உணவுகளை சாப்பிட்டு வருவதால் இதன் குறைபாடுகளை தவிர்க்கலாம்.உணவில் சாதாரணமான எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.

பச்சை காய்கறிகள், பழங்கள், கீரை, வேர்கடலை, பொட்டுகடலை, திராட்சை, தக்காளி,திராட்சைபழம், ஆரஞ்சு பழம் மற்றும் முளைகட்டிய தானியம், இவையெல்லாம் முறையாக சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்.

இதனை நீக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

மிளகு

திப்பிலி

சுக்குப்பொடி

செய்முறை:

1: முதலில் ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் திப்பிலியை எடுத்து உரலில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

2: பிறகு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.

3: தண்ணீர் சேர்த்த உடன் அதில் அரை டீஸ்பூன் சுக்கு மற்றும் அரைத்து வைத்த மிளகு திப்பிலி பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

4: பிறகு வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால் போதும்.

சக்கரை நோய் உள்ளவர்கள் தேனை தவிர்த்து விடலாம்.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டும்.

இதனை தினமும் குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் வெறும் 10 நாட்களில் தீர்ந்து விடும்.

இதில் பயன்படுத்திருக்கும் மிளகு திப்பிலி சுக்கு போன்ற நரம்புகளுக்கு மிக வலிமையை கொடுக்கும் நரம்பில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும்.

சில பேருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படும் அது நடக்கும் பொழுது உணர்வுகள் இல்லாமல் கை கால் நடுக்கம் இது போன்று உணர்வுகள் கூட இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகளுக்கு நாம் தினமும் இதனை குடித்து வந்தால் இவ்வகை பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

author avatar
Parthipan K