இந்தக் கீரையை மிஸ் பண்ணிடாதீங்க!! ரத்த சுத்திகரிப்புக்கு இது ஒன்றுதான் தீர்வு!!

0
99
#image_title

இந்தக் கீரையை மிஸ் பண்ணிடாதீங்க!! ரத்த சுத்திகரிப்புக்கு இது ஒன்றுதான் தீர்வு!!

ரத்தத்தின் அளவு சரியாக இருக்கும் பட்சத்தில் அனிமியா போன்ற உபாதைகளில் இருந்து சற்று நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். ரத்தத்தின் அளவானது குறைந்து வரும் நிலையில் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி முதல் இதர நோய்களையும் பெற்றுக் கொள்வோம்.

ஒருவரின் உடலில் ரத்தமானது தூய்மையாக இருக்க வேண்டும் என்றால் ஆக்ஸிஜன் நிறைந்த காணப்பட வேண்டும். அதுமட்டுமின்றி இதையும் வரையிலும் வேலை செய்வதற்கு ரத்தத்தின் ஆக்சிஜனேற்றம் முக்கிய காரணமாக உள்ளது. அத்தோடு நமது ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதில் முக்கிய பங்கு சிறுநீரகத்திற்கும் கல்லீரலுக்கும் உள்ளது.

நமது உடலில் அல்லது ரத்தத்தில் கழிவுகள் இருக்கும் பட்சத்தில் அடுத்தடுத்து பல தொற்றுகளை சந்திக்க நேரிடும். எனவே நமது ரத்த அணுக்கள் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் பல்வேறு தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

பலருக்கும் ரத்தத்தில் கிருமிகள் உள்ளது இதனால் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூறி இருப்பதை கேட்டிருப்போம். அவ்வாறு இருப்பவர்கள் தங்கள் ரத்தத்தை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வந்தாலே அதனை செய்து கொள்ளலாம்.

ரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு கீரைக்கு உள்ளது. அதிலும் குறிப்பாக பொன்னாங்கண்ணி கீரைக்கு அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் பொன்னாங்கண்ணிக் கீரையை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் சிறிதளவு சின்ன வெங்காயம் சீரகம் பூண்டு மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வேக வைத்து கொள்ள வேண்டும். பின்பு அதனை மசித்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தம் தூய்மை அடையும்.