நாம் சாப்பிட்டுவிட்டு எப்பொழுதும் தோல்களை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் இந்த பழத்தின் தோலை தூக்கி எறியாதீர்கள். இதில் உள்ள மருத்துவ பலன்களை கேட்டால் அசந்து போய் விடுவீங்க
மாதுளம் பழத்தை சாப்பிடுவதன் மூலம் நமக்கு ரத்தம் சுத்திகரிக்கும். புற்றுநோயை தடுக்கும் வல்லமை கொண்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் மாதுளம் பழத்தை விட அதன் தோளில் அத்தகைய ஆக்சிடென்ட்கள் உள்ளதாக சமீபத்தில் ஆராய்ச்சிகள் வெளியாகி உள்ளது.
மாதுளம் பழத்தின் தோலை இப்படி சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் தீர்வு கிடைக்கும். பல்வலி குணமாகும். தொண்டை பிரச்சனை குணமாகும். வாய்ப்புண் குணமாகும். புற்றுநோய் செல்களை தடுக்கும் இரத்தத்தை சுத்திகரிக்கும். கர்ப்பப்பையை குணப்படுத்தும்.
மாதுளம் பழ தோல்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருமுறை நன்கு கழுவி கொள்ளுங்கள்.
சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் இரண்டு நாட்கள் காய வையுங்கள்.
அதன் பின் நீங்கள் கண்ணாடி பாட்டில்களில் இதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளரில் நன்கு காய்ந்த சுடுநீரை எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டு காய வைத்த மாதுளை தோல்களை போடவும்.
அரை மணி நேரம் அதை மூடி வைக்கவும்.
அதன் பின் அதை பார்க்கும் பொழுது உங்களுக்கே அதனுடைய நிறம் மாறியிருப்பது தெரியும். இப்பொழுது நீங்கள் இதை குடிக்கலாம்.
இப்படி குடிப்பதன் மூலம் ஏகப்பட்ட நோய்கள் குணமாகும்.