தினமும் 2 கிராம்பை இப்படி செய்து குடித்து பாருங்கள்!! பிறகு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!!

0
31

தினமும் 2 கிராம்பை இப்படி செய்து குடித்து பாருங்கள்!! பிறகு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!!

வாரத்தில் இரண்டு முறை இந்த டீயை குடித்தால் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இயற்கையாகவே உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கும். மேலும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் மூட்டு வலி, எலும்பு தேய்மானம், உடல் சோர்வு உடல் அசதி ஆஸ்துமா வாய் துர்நாற்றம் பல் வலி ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நெஞ்செரிச்சல் அஜீரணக் கோளாறு மலச்சிக்கல் வாயு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கல்லீரல் நீரழிவு நோய் பிரச்சனைகள் இவ்வாறு எல்லா நோய்களுக்குமே ஒரு தீர்வை கொடுக்கக்கூடிய டீயை எவ்வாறு செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

இதற்கு நாம் பயன்படுத்த போவது இந்தியாவில் உள்ள அனைத்து சமையலறைகளிலும் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தக்கூடிய ஒன்று அதுதான் கிராம்பு. இது இதற்கு மட்டுமல்லாமல் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த கிராம்பில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் எந்த ஒரு நோய் தொற்றுகளும் நம்மை நெருங்காமல் நம் உடம்பை பாதுகாத்து வைத்திருக்கிறது. மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து எலும்புக்கு நல்ல ஒரு அடர்த்தியை தந்து உறுதியாக்கும்.

நம் உடம்பில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரல் செயல்படும் அந்த கல்லீரலே நச்சுக்களால் பாதிக்கப்படும்போது கல்லீரலில் இருக்கக்கூடிய நச்சுக்களை நீக்க பயன்படும் ஒரு பொருள்தான் கிராம்பு. மேலும் ரத்தத்தில் அதிகப்படியாக இருக்கக்கூடிய சர்க்கரையை நீக்குவதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் இந்த கிராம்பு பயன்படுகிறது. பல் வலி ஈறுகளில் ரத்தம் கசிதல் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு கிராம்பை எடுத்து வாயில் கடித்து விடாமல் அப்படியே அதன் உமிழ் நீரை விழுங்கி வர உடனடியாக சரியாகும்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் அரை தேக்கரண்டி அளவு அதாவது எட்டில் இருந்து 10 கிராம்புகளை சேர்க்க வேண்டும். இவ்வாறு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீர் நிறம் மாறும் வரை நன்றாக கிராம்பு அந்த தண்ணீரில் கொதிக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி எடுத்துக்கொண்டு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு தாராளமாக குடித்து வரலாம். இவ்வாறு இந்த டீயை தொடர்ந்து குடித்து வர மேல கூறப்பட்டுள்ள அனைத்து விதமான நோய்களும் தீர்ந்து உடம்பு மிகவும் ஆரோக்கியமாக காணப்படும்.

author avatar
CineDesk