கன்னியாகுமரியில் அரசு பேருந்து மோதி டிரைவர் பலி! பரபரப்பில் அப்பகுதி!

Photo of author

By Parthipan K

கன்னியாகுமரியில் அரசு பேருந்து மோதி டிரைவர் பலி! பரபரப்பில் அப்பகுதி!

Parthipan K

Plus 1 student who went to school died tragically! The people of the area are deeply saddened!

கன்னியாகுமரியில் அரசு பேருந்து மோதி டிரைவர் பலி! பரபரப்பில் அப்பகுதி!

கன்னியாகுமரி மாவட்டம்  திருவட்டார் அருகே வியன்னூர் குன்றுவிளை பகுதியைச் சேர்ந்த அஸின் (28). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். தினந்தோறும் காலை மாலை இரண்டு நேரங்களிலும் பள்ளி மாணவ மனைவிகளை  பள்ளிகளுக்கு அழைத்து வருவதுடன் மாலையில் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்.

இன்று காலை வழக்கம் போல்  பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதாக வில்லன் குறியில் நிறுத்தி இருந்த பஸ்ஸை எடுப்பதற்காக வீட்டில் இருந்து  வில்லுக்குறிக்கு வந்தார். வில்லங்குறி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த அரசு பஸ் அஸின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

அந்த பேருந்து மோதிய வேகத்தில் அந்த பஸ் ரோட்டோரத்தில் இருந்த சுவர் மீது மோதி நின்றது. இந்த பேருந்து மோதிய வேகத்தில் அஸின் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அக்கம் பக்கத்தினர் அஸின்யை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் அஸின்யை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். ரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.