எளிதாக வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ் அணி

0
165

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் அணியும், ஜமைக்கா அணியும் மோதின. டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஜமைக்கா அணி 8 விக்கெட் இழந்து 135 ரன்களை மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிக பட்சமாக பிலிப்ஸ் 58 ரன்களை குவித்தார். பின்னர் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி 136 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிக பட்சமாக சுனில் நரேன் 53 ரன்கள் எடுத்தார்.

Previous articleதொடரும் முதல்வர் வேட்பாளர் குறித்தான சர்ச்சை ! அதிமுக தலைமை என்னதான் செய்ய போகிறது !?
Next articleபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்களுக்கு தீர்ப்பு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here