காலையில் நிம்மதியாக மலத்தை வெளியேற்ற இதை பழம் ஒன்று சாப்பிடுங்கள்! ரிசல்ட்ட பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

0
161
Eat one of these fruits in the morning for easy bowel movement! You will be surprised by the result!!
Eat one of these fruits in the morning for easy bowel movement! You will be surprised by the result!!

காலையில் நிம்மதியாக மலத்தை வெளியேற்ற இதை பழம் ஒன்று சாப்பிடுங்கள்! ரிசல்ட்ட பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

மலச்சிக்கல் பாதிப்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்தித்து வருகின்றனர்.உடலில் நீர்ச்சத்து,நார்ச்சத்து குறைந்தால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படும்.

இந்த மலச்சிக்கல் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விட்டால் அவை குடல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

குடலில் இறுகி கிடக்கும் மலக் கழிவுகளை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறையை பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)விளக்கெண்ணெய்
2)உலர் அத்தி பழம்

செய்முறை:-

காலையில் எழுந்ததும் பற்களை துலக்கி விட்டு ஒரு உலர் அத்திப்பழத்தில் 2 அல்லது 3 சொட்டு விளக்கெண்ணெய் ஊற்றி சப்பிடவும்.இவ்வாறு செய்தால் மலக்குடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)பப்பாளி
2)தேன்

செய்முறை:-

ஒரு கீற்று பப்பாளி பழத்தில் சிறிது தேன் சேர்த்து காலை நேரத்தில் சாப்பிட்டால் சில நிமிடங்களில் இறுகிய மலம் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)உலர் திராட்சை
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிளாஸ் அளவு நீரில் 5 உலர் திராட்சை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சம் பழம்
2)உப்பு

செய்முறை:-

ஒரு கிளாஸ் அளவு நீரை சூடாக்கி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1/4 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து குடித்தால் குடலில் இறுகி கிடக்கும் மலம் இளகி வெளியேறும்.