மே 2ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு குறித்து ஆலோசனை

Photo of author

By Parthipan K

மே 2ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு குறித்து ஆலோசனை

Parthipan K

Updated on:

மே 2ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு குறித்து ஆலோசனை

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாக பரவுவதைத் தடுக்கும் வகையில் முதற்கட்டமாகக் கடந்த மாதம் 24ம் தேதியிலிருந்து இம்மாதம் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது.

இந்த காலகட்டத்தில் கொரோனா சமூக பரவல் ஏற்படாமல் இருந்திருந்தாலும் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இரண்டாம் முறையாக ஏப்ரல் 14ம் தேதியிலிருந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா தாகத்திற்கு ஏற்றவாறு அந்தந்த மாநில முதல்வர்கள் ஊரடங்கைத் தளர்த்திக் கொள்ளவோ, கடுமையாக்கிக் கொள்ளவோ அதிகாரமளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. நாளை முதல் மும்பு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போதைய நிலை குறித்து பல்வேறு நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை நடத்திய நிலையில் வரும் மே 3ம் தேதிக்கு மேல் ஊரடங்கை நீட்டிப்பதா என்பதைக் குறித்து விவாதிக்க மே 2ம் தேதி முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூடி விவாதித்து முடிவெடுக்கவிருக்கிறது.