அதிகமாக முடி கொட்டுகின்றதா? கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க!

0
131
#image_title

அதிகமாக முடி கொட்டுகின்றதா? கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க!

நம்மில் அனைவருக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருக்கின்றது. ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அனைவருக்கும் இந்த முடி கட்டுதல் பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது. இந்த முடி கட்டுதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் ஒரு முக்கியமான மருத்துவ முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நாம் அனைவரும் நம்முடைய உடலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அது போலவே நம்முடைய தலை முடிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். தலை முடி உதிர்தல் பலமாக இருக்க பல வகையான எண்ணெய் வகைகள், ஷேம்பூக்கள் பயன்படுத்துவோம். ஆனால் சிலருக்கு அது பலன் தராமல் முடி உதிரும் பிரச்சனையை அதிகப்படுத்தி விடும்.

இந்த முடி உதிரும் பிரச்சனையை கட்டுப்படுத்தவும் நிறுத்தவும் கற்றாழை ஜெல் உதவுகின்றது. கற்றாழை ஜெல் சருமத்திற்கு மட்டும் பயன்படாமல் தலை முடிக்கும் பல நன்மைகளை தருகின்றது. அவ்வாறு இந்த கற்றாழை ஜெல்லுடன் ஒரு சில பொருட்களை நாம் பயன்படுத்தி தலைக்கு தேய்க்கும் பொழுது முடி உதிரும் பிரச்சனை குணமாகும். அது என்னென்ன எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* கற்றாழை
* தயிர்
* தேன்

செய்முறை…

ஒரு சிறிய பவுல் ஒன்று எடுத்து அதில் 2 ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் ஒரு ஸ்பூன் அளவு தயிர் சேர்த்து நன்கு கலந்து இறுதியாக இதில் 2 ஸ்பூன் அளவு தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதோ முடி உதிர்வை தடுக்கும் மருந்து தயார்.

இந்த மருந்தை தலையில் ஸ்கேல்ப் மற்றும் முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் கழிந்து குளிக்க வேண்டும். இது போல வாரம் ஒரு முறை செய்தால் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம். அது மட்டுமில்லாமல் உடல் சூடும் தணிந்து விடும்.