காதலித்து திருமணம் செய்தகொண்ட ஜோடி! மனைவியின் தவறான செயலால் கணவன் செய்த வெறிச்செயல்..!!

0
84

காதலித்து திருமணம் செய்தகொண்ட ஜோடி! மனைவியின் தவறான செயலால் கணவன் செய்த வெறிச்செயல்..!!

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கவணனே அவரை கொடூரமாக கொலை செய்த கொடூர சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள ஹார்விபட்டி பகுதியில் இருக்கும் எஸ்.ஆர்.வி நகரைச் சேர்ந்ந அசோக் என்பவர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், மனைவி சுதா வேலைக்கு சென்று வந்த நிலையில் அவரிடம் பணத்தை வாங்கி அசோக் குடித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவரிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வேலை நிமித்தமாக சுதா கோயம்புத்தூர் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி மீது சந்தேகமடைந்த அசோக், தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கோயம்புத்தூரில் இருந்து வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய சுதா, தனது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வருமாறு கணவனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து குழந்தைகளை அழைத்து வராமல் தனியாக வந்த கணவரிடம் குழந்தைகள் எங்கே என்று சுதா கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் சுதாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணையில், மனைவி சுதா டிக்-டாக் மூலம் பலருடன் பழகியது கணவனுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். இதனால் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தலைமறைவான அசோக் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

author avatar
Jayachandiran