சமையலில் சுவையை கூட்ட அருமையான 5 டிப்ஸ் #5டிப்ஸ்

0
182
Fantastic 5 Tips to Add Flavor to Cooking # 5 Tips
Fantastic 5 Tips to Add Flavor to Cooking # 5 Tips

சமையலில் சுவையை கூட்ட அருமையான 5 டிப்ஸ் #5டிப்ஸ்

வற்றல்:

ஜவ்வரிசி அல்லது அரிசி கூழ் கிளறும் போது கசகசாவை பொடி செய்து அதில் போட்டு கிளறி வடாம் அல்லது வற்றல் பொறித்தால் வற்றல் தனி சுவையாக இருக்கும்.

எண்ணெய் பலகாரம்:

எண்ணெய் பலகாரம் செய்யும் போது எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிதளவு புளி சேர்த்து கருகும் வரை விட்டு பின் புளியை எடுத்து எறிந்து விட்டு பின் பலகாரம் பொரிதல் எண்ணெய் காரல் இல்லாமல் இருக்கும்.

பூரி :

பூரிக்கு மாவு பிசையும் போது அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்து பூரி சுட்டால் பூரி நிறைய நேரம் நமுத்துப் போகாமல் இருக்கும்.  பூரி நன்கு உப்பிவரும்.

முறுக்கு:

மைதா மாவை பிசையும் போது தண்ணீர் ஊற்றாமல் ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு நீர் ஆவியில் வேகவைத்து எடுத்து தேவைக்கு ஏற்ப உப்பும் நெய்யும் சேர்த்து பிசைந்து முறுக்கு சுட்டால் முறுக்கு கரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

ரசம் :

தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் அதை ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் சுண்டல் வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் அதை ரசத்தில் சேர்த்தால் ரசத்தில் புது சுவை கூடும்.

Previous articleபிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனாவா? சுகாதாரத்துறையின் டெஸ்ட் ரிசல்ட் இதோ!
Next articleஒரு சிங்கம் எம்.எல்.ஏ.வாக வந்தால் எப்படி இருக்கும்..?- அனல்பறக்கும் பிரச்சாரத்தில் நமீதா..!