தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!!

Photo of author

By Rupa

தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!!

Rupa

Fasting Porridge in Street Jamaat.. All community people participate with religious harmony!!

தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் லப்பை தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி திறக்கப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள திமுக கழகத்தை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். சிதம்பரம் நகர் மன்ற உறுப்பினர் பத்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இஸ்மாயில் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிதம்பரத்தில் உள்ள திமுக கழக நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் அன்சாரி இஸ்மாயில் ஹாஜா மற்றும் அன்சாரி. சாகுல் பாவா ஹஜ்ரத் நிர்வாகிகள் அனைத்து சமுதாய மக்களுக்கும் நோன்பு கஞ்சி மற்றும் ஸ்வீட் பழங்கள் வைத்து மத நல்லிணக்கத்துடன் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது அனைத்து சமுதாய மக்களும் இதில் கலந்து கொண்டு இந்த ரம்ஜான் கஞ்சியை ருசித்து சாப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.