கல்வி நிறுவனத்தில் பெண்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிப்பு!

Photo of author

By Kowsalya

கல்வி நிறுவனத்தில் பெண்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிப்பு!

Kowsalya

விருதுநகரில் அமைந்துள்ள வி.வி. வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி பெண் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. ஆசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.

 

நிறுவனம் : V.V. Vaniyamperumal College for Women

பணியின் பெயர் : Assistant Professor

பணியிடங்கள்: 03

கடைசி தேதி: 25.06.2021

 

ஆசிரியர் பணிக்கு மூன்று காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் English, Maths, Physics ஆகிய பாடங்களில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ph.D படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

 

தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

 

விண்ணப்பங்கள் கல்லூரிக்கு 25 .6 .2021 தேதிக்குள் வந்த சேர வேண்டும்.

 

எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிரீர்களோ அதன் விவரத்தை கடிதத்தின் மேலே குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தொலைபேசி மூலம் அழைக்கப்படுவார்கள்.

 

அனுப்ப வேண்டிய முறை:

 

1. சுய விவரங்கள் அடங்கிய ரெஸ்யூம் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்கள் நகல்.

2. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்.

3. ஜாதி சான்றிதழ்

4. கையொப்பமிட்ட ஸ்டாம்ப்.

அனுப்ப வேண்டிய முகவரி: செக்ரட்டரி கரஸ்பாண்டன்ட் என்று குறிப்பிடப்பட்டு காலேஜ் முகவரிக்கு அனுப்பலாம்.