தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..!

0
128
#image_title

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..!

திருமணமான பெண்கள் அனைவருக்கும் தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக பல பூஜை, பரிகாரங்கள் செய்வதும் உண்டு. ஆனால் வெள்ளிக்கிழமை அன்று செய்யக் கூடிய தீர்க்க சுமங்கலி பூஜை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று.

இந்த பூஜை தை மாதம் வெள்ளிக் கிழமை அன்று செய்யப்படும் ஒன்றாகும். இந்த பூஜையை மாலை நேரத்தில் செய்ய வேண்டும்.

இந்த பூஜைக்கு பிளவ்ஸ் பிட், மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வாங்கிக் கொள்ளவும். 5 சுமங்கலி பெண்களுக்கு கொடுக்கும் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.

தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கடவுளுக்கு பூ மாலை அலங்காரம் செய்யவும்.

அடுத்து இனிப்பு பொங்கல் செய்து கடவுளுக்கு நெய்வேத்தியம் படைக்கவும். வாங்கிய பொருட்களை பூஜை அறையில் வைத்து தீப தூபம் காட்டி கடவுளுக்கு பூஜை செய்யவும்.

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்க வேண்டும் என்று கடவுளிடம் மனதார வேண்டிக் கொண்டு பூஜை செய்யவும்.

பிறகு 5 சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களிடம் வாங்கி வந்த பொருட்களை தாம்பூலத்தில் வைத்து கொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளவும்.

பின்னர் குங்குமத்தை நெற்றி மற்றும் தாலியில் இட்டுக் கொள்ளவும். இந்த பூஜை சக்தி வாய்ந்தவை. இந்த பூஜையை செய்தால் நிச்சயம் பலன் கொடுக்கும்.