கரம் மசால் தூள் இப்படி செய்து குழம்புக்கு பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்!!

0
55
#image_title

கரம் மசால் தூள் இப்படி செய்து குழம்புக்கு பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்!!

நம் இந்தியர்களின் உணவில் மசாலா பொருட்கள் அதிகம் இடம் பெற்றுகிறது.காரணம் அதன் வாசனை மற்றும் மருத்துவ குணங்கள்.அதுபோல் கறிக்குழம்பு,உருளைக்கிழங்கு,முட்டை,குருமா உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் ருசியை கூட்டுவதில் கரம் மசால் தூளுக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த கரம் மசால் துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி விதை – 1 1/2 கப்

*பெருஞ்சீரகம்(சோம்பு) – 1/2 கப்

*பட்டை – 10 (சிறு துண்டு)

*சீரகம் – 1/4 கப்

*பிரிஞ்சி(பிரியாணி இலை) – 15

*ஏலக்காய் – 20

*கிராம்பு(இலவங்கம்) – 20

*அன்னாசி மொக்கு – 10

*ஜாதிக்காய் – 1

*கருப்பு மிளகு – 1 1/2 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 2 கொத்து

*வரமிளகாய் – 15 முதல் 20

*கசகசா – 3 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

1.அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் மிதமான தீயில் 20 வர மிளகாய் போட்டு வறுக்கவும்.வர மிளகாய் கருகி போகாமல் மொறு மொறுப்பாக வரும் வரை வறுத்து கொள்ளுங்கள்.இதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

2.அடுத்து கடாயில் கொத்தமல்லி விதை 1 1/2 கப் சேர்த்து வாசனை வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும்.பின்னர் இதை வரமிளகாய் தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

3.பிறகு கடாயில் கருப்பு மிளகு 1 1/2 தேக்கரண்டி சேர்த்து நன்கு வறுத்து ஏற்கனவே வறுத்த பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளவும்.

4.அடுத்து சீரகம்,சோம்பு இரண்டையும் கடாயில் சேர்த்து பொரிந்து வரும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.ஏற்கனவே வறுத்த பொருட்களுடன் இதை சேர்த்துக் கொள்ளவும்.

5.அதன் பின்னர் பட்டை,இலவங்கம்,அன்னாசி மொக்கு,பிரியாணி இலை,ஜாதிக்காய், கசகசா,ஏலக்காய்,கருவேப்பிலை உள்ளிட்டவற்றை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.பிறகு அடுப்பை அணைக்கவும்.வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவிடவும்.

6.அவை ஆறியப்பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் குழம்புக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

7.பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.பின்னர் இதை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும்.கரம் மசாலா தூள் இந்த முறையில் செய்து குழம்பு வைத்தால் குழம்பு மிகவும் சுவையாகவும்,அதிக வாசனையுடனும் இருக்கும்.இந்த பொடியை 1 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.