வீட்டில் பணத் தடை நீங்க.. இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!!

0
112
#image_title

வீட்டில் பணத் தடை நீங்க.. இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் அல்லது இருப்பிடத்தில் பணத் தடை நீங்க செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மறக்காமல் இதை செய்யவும்.

பூஜை அறையில் ஒரு சிறிய தட்டில் உங்களிடம் உள்ள எதாவது ரூபாய் நோட்டை அதில் வைத்து பூ வைத்து விளக்கேற்றி தூப தீபம் காட்டி வழிபடவும்.

வழிபாடு செய்யும் போது, ஸ்ரீம் ப்ரிஸி” (Shreem Brizee)என்ற மந்திரத்தை 48 முறை சொல்லி மஹாலட்சுமி தாயாரிடம் – பணத் தடை நீங்கி செல்வம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டி வழிபடவும்.

முக்கியமான விஷயம் – தூபம் போடும் போது அதாவது சாம்பிராணி புகை காட்டும் பொழுது அதில் 1 ஸ்பூன் சர்க்கரை, 2 பட்டை சிறிது பச்சைக் கற்பூரம் அனைத்தையும் போட்டு அந்த புகையை அந்த ரூபாய் நோட்டுக்குக் காட்டி வீடு முழுவதும் காட்டவும்.

அன்று மாலை அந்த ரூபாய் நோட்டை எடுத்து பணம் இருக்கும் இடத்தில் வைக்கவும். ஒவ்வொரு வாரமும் அதை சேமித்து வைக்கவும். இவ்வாறு செய்யத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் பணத் தடை நீங்கி பண வரவு அதிகமாகும்.