மின் இணைப்பு வழங்க இவ்வளவு லஞ்சம் கொடு!! கேட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

0
38
Give so much bribe to provide electricity connection!! Action decision given by the court to the official!!
Give so much bribe to provide electricity connection!! Action decision given by the court to the official!!

மின் இணைப்பு வழங்க இவ்வளவு லஞ்சம் கொடு!! கேட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

மின் இணைப்பு பெறுவதற்காக ரூபாய் 4000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அடுத்த கன்னடபாளையம் அஸ்வினி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன ராவ்.  அயப்பாக்கம் பவானி நகர் எம்.ஜி.ஆர் தெருவில் அவருக்கு  உரிமையான இடம் ஒன்றிற்கு  மின் இணைப்பு வழங்க வேண்டி அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில்அதற்குரிய  கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்துள்ளார்.. ஆனால் அவரது விண்ணப்பம் எந்தவித  பரிசீலனையும்  செய்யப்படாமல்  3 மாதங்களாக இருந்துள்ளது.

இதனால் அவர் அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகம் சென்று பணியில் இருந்த இளநிலை பொறியாளர் தனசேகர் என்பவரிடம் மின் இணைப்பு வழங்கக் கோரியுள்ளார். அப்போது தனசேகர் ரூ.6000 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும் என தெரிவித்தார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ஜனார்த்தன ராவ் இதுபற்றி  சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.  லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.4 ஆயிரம் பணத்தை ஜனார்த்தன ராவிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

அவர் பணத்தை கொண்டுச் சென்று தனசேகரிடம் கொடுத்தபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தனசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட தனசேகரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.