போக்குவரத்து ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கோடை காலத்தில் வெளியான அறிவிப்பு!!

0
11
Good news for transport workers!! Announcement released during the summer!!
Good news for transport workers!! Announcement released during the summer!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கான கோடைகால அறிவிப்புகளை போக்குவரத்து துறை வெளியிட்டிருக்கிறது.

கோடை காலம் துவங்கிய நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருவதாகவும் இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து ஏசி அல்லாத பேருந்துகளில் பயணிக்க கூடிய இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து ஏசி அல்லாத பேருந்துகளில் பயணிக்க கூடிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் போன்றவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் பேருந்துகளில் பயணிக்க கூடிய பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவற்றை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பேருந்துகளில் குடிநீர் வசதி ஒஆர்எஸ் வழங்குதல் போன்றவை செயல்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போக்குவரத்து துறையின் சார்பில் வெளியிடப்பட்ட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறையின் சார்பில் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் :-

✓ தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களின் பணியிடங்களான பேருந்து நிலையங்கள், நேரக் கண்காணிப்பாளர் அறைகள், உணவகம், ஓய்வு அறைகள் போன்றவைகளில் குடிநீர் மற்றும் மோர் வசதிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவை பயணிகள் எளிதாக பெற்றுக்கொள்ள கூடிய இடங்களில் வைப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ பயணிகளுக்கு நல்ல குடிநீரை வழங்கும் நோக்கோடு RO இயந்திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவற்றை சுத்தம் செய்தல் பராமரித்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது நீர் அருந்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை குறைப்பதற்காக பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு பணிநேரத்தின் பொழுது ஓஆர்எஸ் பொட்டலங்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ போக்குவரத்து பணியாளர்கள் நேரடியாக வெயிலில் நடக்க வேண்டி இருந்தால் கட்டாயமாக தொப்பி அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ உடலில் வெப்பம் அதிகரித்து மயக்கம் அதிகப்படியான வியர்வை தலைவலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மேலாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்கான மருத்துவ வழிபாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய உடல்நல குறைவுகளுக்கு மருந்துகளை முதலுதவி பெட்டிகளில் அவசியம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

✓ பேருந்துகளில் ஏர்கண்டிஷனர் சரியாக இருக்கிறதா என்பதை சோதிப்பதோடு காற்றோட்டமாக பேருந்து உள்ளதா என்பதையும் சோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவீட்டை விடுதியாக மாற்றிய மம்முட்டி!! ஏப்ரல் 2 தேதி முதல் முன்பதிவு தொடக்கம்!!
Next articleரவுடியெல்லாம் அமைச்சரானா இப்படித்தான்!.. சேகர்பாபுவை தாக்கும் அண்ணாமலை!…