குட் நியூஸ்..ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் இலவசமாக கிடைக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!!

0
42
#image_title

குட் நியூஸ்..ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் இலவசமாக கிடைக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி,கோதுமை இலவசமாகவும்,ஒரு கிலோ சர்க்கரை 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன.சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் 1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு,ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இந்த நியாய விலை பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்க பெறுவதால் ஏழை எளிய பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இது திகழ்ந்து வருகிறது.PHH,PHH- AAY,NPHH,NPHH-S ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் மட்டும் நியாய விலை பொருட்கள் வாங்க முடியும்.இதில் NPHH-S குறியீடு கொண்ட அட்டையை தவிர்த்து மற்ற அட்டைகளுக்கு அரசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் PHH- AAY உள்ளிட்ட நியாய விலை பொருட்கள் வாங்கி வரும் சுமார் 1 கோடி அட்டைதாரர்களுக்கு கோதுமை 3 கிலோ இலவசமாக வழங்கப்படுகிறது.இதற்காக ஒவ்வொரு மாதமும் 8,500 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு கடந்த மாதம் இந்த ஒதுக்கீட்டில் இருந்து 1038 டன்னாக குறைத்ததால் அனைத்து அட்டைதாரர்களுக்கும் கோதுமை வழங்க முடியாமல் போனது.PHH- AAY அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கோதுமை வழங்கப்பட்டது.இந்நிலையில் தற்பொழுது மீண்டும்
8,500 டன் கோதுமையை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கி இருப்பதால் இனி அனைத்து அட்டைதாரர்களுக்கும் 3 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.