தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

0
115

தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

முதலில் கறுப்பு திராட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.திராட்சையின் விதைகளை நீக்கி சாறு அதனுடைய எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவி விட வேண்டும்.அதன் பிறகு மென்மையான பருத்தி துணியை கொண்டு முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும்.

மேலும்  திராட்சை பழச்சாற்றில் சூரிய வெப்பத்தால் தாக்கக்கூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் வெப்பக் கட்டிகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளது.

திராட்சைப் பழத்தை நன்கு அரைத்து கூல் போல மாற்றவும். இதன் முகம், கழுத்து பகுதிகளில் பூசி ஊறவைக்கவும். நன்கு உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகம் புத்துணர்ச்சியாகும். சுருக்கம் ஏற்படாது.