கன்னிராசியில் பெயர்ச்சி செய்யும் குரு பகவான் : துன்பத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

0
46
#image_title

கன்னிராசியில் பெயர்ச்சி செய்யும் குரு பகவான் : துன்பத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

வரும் புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மேலும், புதன் பகவான் வக்ரநிலை அடைகிறார். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு சற்று சிக்கல்களும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரப்போகிறது என்று பார்ப்போம் –

ரிஷபம்

வரும் புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களக்கு நல்ல பலன்கள் தேடி வந்தாலும், சில சிக்கல்கள் உங்களுக்கு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆனால், வீட்டில் சின்ன சண்டை பெரிய பிரச்சினையாக மாறக்கூடும். இதனால், கவனமுடன் இருக்க வேண்டும். பணி செய்யும் இடத்தில் உங்கள் வேலைகளை திட்டமிட்டு செயல்படுங்கள்.

கன்னி

வரும் புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதால், உங்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். செய்யும் செயலை திட்டமிட்டு செயல்படுங்கள். முதலீடு செய்யும் முன் சற்று கவனமுடன் இருங்கள். செலவு செய்யும்போது எச்சரிக்கையுடன் இருங்கள்.

துலாம்

வரும் புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதால், துலாம் ராசிக்காரர்களே நீங்கள் நினைத்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள். வெற்றிகள் உங்களை தேடி வரும். பணிச்சுமை குறையும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். இதனால் மன அமைதி குறையும்.

மகரம்

வரும் புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதால், மகர ராசிக்காரர்களே உங்களுக்கு சில செய்தி தேடி வரும். ஆனால், சில சவாலான காலமாக இது அமையும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவையற்ற செலவுகளை குறையுங்கள். பணி செய்யும் இடத்தில் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்துங்கள்.

கும்பம்

வரும் புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதால், கும்ப ராசிக்காரர்களே உங்கள் குடும்ப உறவினர்களுடன் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். கோபம், ஈகோ ஏற்படும். குடும்பத்தில் மனைவியுடன் சண்டை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இந்த சமயத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். பணிசெய்யும் இடத்தில் தேவையற்ற கோபம் ஏற்படும். இதனால் கவனமாக இருங்கள்.

author avatar
Gayathri