பழுதடைந்த சிறுநீரகத்தை சுறு சுறுப்பாக வேலை செய்ய வைக்கும் வீட்டு வைத்தியம்!!

0
32
#image_title

பழுதடைந்த சிறுநீரகத்தை சுறு சுறுப்பாக வேலை செய்ய வைக்கும் வீட்டு வைத்தியம்!!

சிறுநீரகம் நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாகும்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது.இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இது பழுதடைந்தால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.இந்த சிறுநீரக பாதிப்பை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்தி விடமுடியும்.

தேவையான பொருட்கள்:-

கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

எலுமிச்சை – பாதியாக நறுக்கியது.

செய்முறை:-

1.அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

2.பின்னர் அதில் கொத்தமல்லி இலை,சீரகம்,எலுமிச்சை உள்ளிட்டவற்றை சேர்த்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

3.1 1/2 டம்ளர் தண்ணீர் கொதித்து 3/4 டம்ளராக வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

4.பின்னர் அவற்றை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருக வேண்டும்.

இவ்வாறு செய்து பருகி வந்தோம் என்றால் உடலில் பழுதடைந்து காணப்படும் சிறுநீரகம் விரைவில் சுறு சுறுப்பாக வேலை செய்ய தொடங்கி விடும்.