வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ!

0
133
#image_title

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ!

பரிகாரம் 01:

இந்த பரிகாரத்தை வெள்ளிக் கிழமை அன்று காலை 6 – 7 மணிக்குள் செய்ய வேண்டும். ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் 3 துண்டு இலவங்கம், 3 பச்சை கற்பூரம், 3 ஏலக்காய் போட்டு பீரோவில் வைத்து விடவும்.

பின்பு நன்றாக மனதில் வேண்டிக் கொண்டு அதன் மீது உங்களிடம் உள்ள எதாவது பணத்தை அதில் வைக்கவும்.

மறுநாள் வரை அந்த பணத்தை செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். எப்பொழுதும் அதில் 10 அல்லது 20 ரூபாயாவது இருக்க வேண்டும். சுத்தமாக பணம் இல்லாமல் இருக்கக் கூடாது.

மாதம் ஒருமுறை இதை மாற்றிப் பழையதை கால் படாத இடத்தில் போடவும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வர நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும்.

பரிகாரம் 02:

இந்த பரிகாரத்தை வெள்ளிக் கிழமை அன்று காலை 6 – 7 மணிக்குள் செய்ய வேண்டும். ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் கல் உப்பு போட்டு அதன் மீது பச்சை கற்பூரம் வைக்கவும். பின்னர் அதன் மீது ஒரு ரூபாய் தாளை வைக்கவும். அதில் இருந்து பணத்தை எடுக்கும் பொழுது குறைந்தது 10 ரூபாய் தாளாவது அந்த கிண்ணத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

சுத்தமாக பணம் இல்லாமல் இருக்கக் கூடாது. மாதம் ஒருமுறை இதை மாற்றி கிண்ணத்தில் உள்ளதைக் கால் படாத இடத்தில் போட்டு விடவும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வர பண வரவில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.