இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ளாத கணவன் !! மனைவியின்  கண்முன்னால் செய்த வெறிச்செயல்!! 

0
69
Husband who does not accept second love !! In front of his wife's eyes, the act of madness!!
Husband who does not accept second love !! In front of his wife's eyes, the act of madness!!

இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ளாத கணவன் !! மனைவியின்  கண்முன்னால் செய்த வெறிச்செயல்!! 

வீடு புகுந்து மனைவி கண் முன்னாலேயே இரண்டாவது காதலனை வெட்டி கொன்ற கணவன் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் செல்வ கணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 29. இவர் கார் டிரைவராக உள்ளார்.

அதேபோல் திருமழிசை பகுதியை சேர்ந்தவர்  விஜயலட்சுமி வயது25.    இவரது கணவர் சத்யா வயது 40. இவர்கள் இருவருக்கும் ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார்.சத்யாவிற்கும், விஜயலட்சுமிக்கு இடையே அடிக்கடி குடும்பச் சண்டை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி தனது மகனுடன் 3 வருடங்களாக  சத்யாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் விஜயலட்சுமிக்கு, சுரேஷ்குமார் உடன்  காதல் ஏற்பட்டுள்ளது.ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில்  இருவரும் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

சத்யாவால் மனைவி விஜயலட்சுமியின்  இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் அவர் சுரேஷ்குமாரை கொலை செய்ய  திட்டம் தீட்டினார். இதன்படி சத்யா தனது நண்பர்கள் 4 பேருடன் விஜயலட்சுமி மற்றும் சுரேஷ்குமார் வாழ்ந்த வீட்டிற்கு அரிவாள்  மற்றும் கத்தியுடன் அதிரடியாக  நுழைந்துள்ளனர்.

அங்கு விஜயலட்சுமியின் கண் முன்னாலேயே சுரேஷ்குமாரை  தலை, கழுத்து, கை மார்பு, பகுதியில் வெட்டி உள்ளனர். மேலும் தடுக்க வந்த விஜயலட்சுமியையும் அரிவாளால் வெட்டியுள்ளனர் . இதில் சுரேஷ் குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்து வந்த ஆவடி போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் அன்பழகன் மற்றும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் படுகாயமடைந்த விஜயலட்சுமியை மீட்டு செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அறிவாள் வெட்டினால் உயிரிழந்த சுரேஷ்குமார் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சத்யா மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.