நான் பிச்சைக்காரியாக இருக்கிறேன்.!! உதவிக் கேட்டு பிரபல நடிகை கண்ணீர்.!!

0
138

நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு யாராவது உதவி செய்யுமாறு அழுதுகொண்டே பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பூந்தோட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாகவும் நடித்துள்ளார்.

தற்போது, இவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இவர் அதில், தான் பெங்களூரில் வசித்து வருவதாகவும், பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும், தனக்கு உதவி செய்யுங்கள் என அழுதபடி பேசியுள்ளார். மேலும், அந்த வீடியோவை பார்த்தப் பிறகு அவரது வங்கி கணக்கில் ஏழு லட்சம் வரை பணம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கர்நாடக சினிமா வர்த்தக சபையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள இவர் எனது அம்மா இறந்தவுடன் என்ன செய்வது என்று தோன்றவில்லை எனவும், சில நண்பர்கள் அந்த சூழ்நிலையில் எனக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எனக்கு கதறி அழுவதை தவிர வேறு ஒன்றுமே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

பெங்களூருவில் நான் இன்றும் பிச்சைக்காரியாக தான் இருக்கிறேன் எனவும், எல்லாவற்றுக்கும் நான் பிச்சைதான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது எனக்கு யாருமே இல்லை எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று அழுதுகொண்டே பேசியுள்ளார்.