வீட்டுக்கு அடங்காத மகன் எனக்கு வேண்டாம்?.. பெற்ற தகப்பனே மகனிடம் வெறிச்செயல்!!

0
99
I don't want a son who doesn't belong at home?.. The adopted father is mad at the son!!
I don't want a son who doesn't belong at home?.. The adopted father is mad at the son!!

வீட்டுக்கு அடங்காத மகன் எனக்கு வேண்டாம்?.. பெற்ற தகப்பனே மகனிடம் வெறிச்செயல்!!..

குமரி மாவட்டம் இரணியல் அருகே பாளையம் சரல் விளை பகுதியை சேர்ந்தவர் தான் சவுந்தரபாண்டியன்.இவருடைய வயது 80.இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார்.இந்நிலையில் இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர்.நான்கு பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி விட்டது.

மீதம் இருக்கும் இரண்டு பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவில்லை.இதில் அவருடைய ஒரு மகன் மட்டும் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.நாகராஜன் என்பவரும் மற்றும் அவருடைய தந்தை சவுந்தரபாண்டியன் ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்கள்.

நாகராஜன் அவ்வப்போது கிடைக்கும் கொத்தனார் வேலைக்கு சென்று வருவார்.இவருக்கு குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும் போதெல்லாம் குடித்து விட்டு வந்துள்ளார்.வீட்டுக்கு  வந்து தன்  தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வருவார்.

அப்போது வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியுள்ளார்.அவரை தடுக்க எவ்வளவோ தந்தை முற்பட்டார்.ஆனாலும் நாகராஜன்  கொஞ்சம் கூட கேக்காமல் தொடர் சண்டையில் ஈடுபட்டார்.இதில் பெருத்த கோபம் அடைந்த சவுந்தரபாண்டியன் அருகில் வைத்திருந்த கோடாரியால் வெட்டி கொலை செய்தார்.

கொலை செய்து விட்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.இதைபற்றி போலீசாரிடம் சவுந்தரபாண்டியன் பின்வருமாறு கூறியுள்ளார்.அதிர்ச்சியடைந்த போலீசார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.விரைந்து வந்த போலீசார்கள்ரத்த வெள்ளத்தில் கிடந்த  நாகராஜன் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த கொலை பற்றி போலீசார்கள் விசாரணை செய்து வருகின்றனர்.இவ்விசாரணையில் நாகராஜன் குடிபோதையில் கொலை செய்யப்பட்டாரா?அல்லது சொத்து பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என பல கோணத்தில் போலீசார்கள் விசாரித்து வருகின்றனர்.தந்தையே மகனை கோடாரியால்  வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K