பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகத் தான் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றது!!! நடிகை சுருதி பெரியசாமி பேட்டி!!!

0
85
#image_title

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகத் தான் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றது!!! நடிகை சுருதி பெரியசாமி பேட்டி!!!

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பிறகு தான் எனக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது என்று பிரபல நடிகை சுருதி பெரியசாமி அவர்கள் தற்பொழுது பேட்டி அளித்து இருக்கிறார்.

இதுவரை நடைபெற்ற 6 பிக்பாஸ் சீன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்பொழுது வெற்றிகரமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகின்றது. வழக்கத்துக்கு மாறக இந்த முறை இரண்டு வீடுகள் இருந்தாலும் முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் நாகப்பட்டினம் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் சுருதி பெரியசாமி அவர்கள் பெற்றார் போட்டியில் கலந்து கொண்டதால் தான் நான் பிரபலம் அடைந்துள்ளேன் என்றும் பட வாய்ப்புகள் வருகின்றது என்றும் பேட்டி அளித்துள்ளார்.

நடிகை சுருதி பெரியசாமி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 7வது வாரத்தில் எலிமினேட் ஆகி வெளியே வந்தார். அதன் பிறகு ஓடிடியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 62வது நாளில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அதன் பிறகு பிக்பாஸ் போட்டியாளர் சுருதி பெரியசாமி அவர்கள் பீட்சா 3 மம்மி, டீமன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். மேலும் நந்தன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் வாழ்வு தொடங்குமிடம் நீதானே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை சுருதி பெரியசாமி அவர்கள் “பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றவர்களுக்கு எப்படி என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் பிரபலம் அடைந்துள்ளேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் நான் பிரபலம் கிடையாது. பிரான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு எனக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றது. பலர் தங்களுடைய புரொபைலை எடுத்துக் கொண்டு வாய்ப்பு தேடி அலைந்து வருகின்றனர். ஆனால் நான் இதுவரை அவ்வாறு வாய்ப்பு தேடி சென்றது கிடையாது. எனக்கு கிடைத்த வாய்ப்புகளும் கிடைக்கும் வாய்ப்புகளும் பிக்பாஸில் என்னை பார்த்த பின்னர் தான்” என்று அவர் கூறியுள்ளார்.

உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் மிகவும் சிலர் மட்டும் தான் திரைப்படங்கள் சீரியல்கள் என்று நடித்து வருகின்றனர். மற்ற அனைவரும் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும்.