“நான் இருந்திருந்தால் ஆட்சியைப் பிடித்து இருப்பேன்” சசிகலா ஆவேசம்!

0
63

என் தலைமையில் செயல்பட்டிருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருப்பேன் என சசிகலா தொண்டருடன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடை சேர்ந்த சிதம்பரம் என்ற தொண்டரிடம் சசிகலா பேசினார். அப்போது கொரோனா தாக்கம் முழுசாக ஓயட்டும். கட்டாயம் நான் வருவேன். கட்சியை இப்போ வேற மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் வந்து இந்த கட்சியை காப்பாற்றுவேன்.

மாண்புமிகு தலைவி அம்மா இருக்கும் பொழுது நம் கட்சி தான் நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்று நமக்கு அந்தஸ்து கிடைத்தது. ஆனால் இன்றைக்கு நம்முடைய எம்பிகளை நாமே இழந்திருக்கிறோம். இருந்த எம்பிக்களையும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இன் தவறான முடிவுகளால் வேற கட்சிக்கு தாரைவார்க்கும் நிலைமைக்குத் தள்ளப் பட்டுள்ளோம். எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தலைமையில் ஒற்றுமையாக இருந்தால் நிச்சயம் ஆட்சி அமைக்கலாம் என்று சசிகலா பேசியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சுந்தரத்திடம் சேலத்தில் கட்சியினர் தன்னிச்சையாக செயல் படுகிறார்கள், கட்சி தொண்டர்கள் கவலைப்படாமல் இருங்கள். நான் வந்து எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன். சரி பண்ணி விடுகிறேன் என்று பேசியுள்ளார்.

அதேபோல் காஞ்சிபுரத்தை சேர்ந்த சந்திரசேகர் ஈரோடை சேர்ந்த பழனிசாமி ஆகியோர் உடன் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சசிகலாவுடன் பேசிய 5 அதிமுக நிர்வாகிகளை அதிமுக தலைமை, கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kowsalya