நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!!

0
172
If Navadhaniya Aarti is performed, any kind of Khan Trishti will disappear!!
If Navadhaniya Aarti is performed, any kind of Khan Trishti will disappear!!

நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!!

கண் திருஷ்டி என்ற பெயரை கேட்டாலே எப்பேர்ப்பட்ட மனிதனும் நடுங்கி போவான்.காரணம் ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றி சக்தி கண் திருஷ்டிக்கு உண்டு.

இன்றைய உலகில் கண் திருஷ்டி ஏற்படுவது அதிகரித்து வருகிறது.எதிலும் போட்டி பொறாமை ஏற்படுவதால் அவை கண் திருஷ்டியாக மாறி விடுகிறது.இதனால் கோடீஸ்வரன் கூட தெருக்கோடிக்கு வந்துவிடுவான்.இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து தப்பிக்க நவதானியத்தில் ஆரத்தி எடுக்க வேண்டும்.

அதாவது ஒரு அகலமான தட்டில் நவதானியம் ஒரு கப் அளவு கொட்டிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரம்,சிறிது குங்குமம் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு ஒரு வெற்றிலையை கிள்ளி போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் 1/4 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நவ தானியத்தை கலந்து விட்டால் நவதானிய ஆரத்தி ரெடி.

இந்த நவதானிய ஆரத்தி மேல் ஒரு வெற்றிலை வைக்கவும்.பிறகு அதன்மேல் இரண்டு கற்பூரம் வைத்து பற்ற வைக்கவும்.

வீட்டில் உள்ள அனைவரும் நிற்க வைத்து இடமிருந்து வலம் மற்றும் வலமிருந்து இடம் என்று 8 முறை ஆரத்தி சுற்றி தெருவோரத்தில் நவதானிய ஆரத்தியை கொட்டி விடவும்.இவ்வாறு மாதம் ஒருமுறை செய்து வந்தால் கண் திருஷ்டி முழுமையாக ஒழியும்.