சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!!

0
116
if-you-do-this-on-the-first-day-of-the-month-of-chitra-debt-problems-will-be-solved
if-you-do-this-on-the-first-day-of-the-month-of-chitra-debt-problems-will-be-solved

சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!!

தமிழ் வருடத்தின் முதல் நாளான சித்திரை மாதம் இன்று தொடங்குகிறது.இந்த மாதத்தின் முதல் நாளில் கடவுளை வழிபட்டால் ஆண்டு முழுவதும் பணப் பிரச்சனை ஏற்படாது.

தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலை வேளையில் எழுந்து வீட்டை துடைக்கவும்.பின்னர் வாசலில் பசுஞ்சாணம் தெளித்து கோலம் போடவும்.பிறகு தலைக்கு குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டு பூஜை அறைக்குள் நுழையவும்.

பூஜை அறையில் உள்ள கடவுள் படங்கள் மற்றும் பூஜை பொருட்களை துடைக்கவும்.பின்னர் கடவுள் படங்களுக்கு மாலை சாற்றி மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைக்கவும்.

பிறகு ஒரு வாழை இலையில் மா,பலா,வாழை பழம் வைக்கவும்.பின்னர் வெற்றிலை பாக்கில் ரூபாய் தாள் வைக்கவும்.

அதன் பின்னர் ஒரு கண்ணாடியை வாழை இலையில் வைக்கவும்.பிறகு பாயாசம்,பொங்கல் போன்ற இனிப்பு பொருட்களை படையல் போடவும்.

அதன் பிறகு இந்த ஆண்டு முழுவதும் கடன் பிரச்சனை,பணப் பிரச்சனை இல்லாமல் வாழ்க்கையை நிம்மதியாக வாழ வேண்டும் என்று கடவுளிடம் மனதார வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு செய்தால் இந்த வருடம் முழுவதும் பணம் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.