கழுத்து மற்றும் தொண்டையில் இந்த மாதிரி இருக்கிறதா.. அப்போ உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளது..?

0
170
#image_title

கழுத்து மற்றும் தொண்டையில் இந்த மாதிரி இருக்கிறதா.. அப்போ உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளது..?

நுரையீரல் புற்றுநோய் என்பது புற்றுநோயின் மற்றொரு வகையாகும். இன்றைய காலத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5.9 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நுரையீரல் புற்றுநோய் என்பது புற்றுநோயின் நான்காவது வடிவமாகும். இந்த நுரையீரல் புற்றுநோய் ஏற்பட 80 சதவீதம் புகைப் பிடிக்கும் பழக்கம் இருப்பதே காரணமாக இருக்கின்றது.

இந்த நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணம் என்ன?

நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமான காரணமாக கருதப்படுவது புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதே.

புகைப்பிடிக்கும் பழக்கம் மட்டுமின்றி காற்று மாசுபாடு, வாகனங்களின் புகை, மற்ற புகைகள், ரேடான் போன்ற இரசாயனங்களின் வெளிப்பாடு, அஸ்பெஸ்டாஸ் போன்றவை நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணமாகின்றது.

ஆரம்ப நிலையிலையே நுரையீரல் புற்றுநோயை கட்டுபடுத்த வேண்டுமென்றால் நுரையீரல் புற்றுநோயை கண்டறிய வேண்டும். நுரையீரல் புற்றுநோயிக்கான சில அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.

அறிகுறி 1

தோள்பட்டையில் வலி

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள்பட்டையில் வலி அல்லது பலவீனத்தை உணரலாம். இந்த தோள்பட்டையில் வலி ஏற்படுவதற்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தான் காரணம்.

புற்றுநோய்க் கட்டி தோள்பட்டையில் அழுத்தத்தை ஏற்படுத்தும். தோள் பட்டையில் உள்ள வலி தோள்பட்டையில் உள்ள நரம்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகளானது புற்றுநோய் தோள்பட்டை வரை பரவியதற்கான அறிகுறியாகும்.

அறிகுறி 2

விழுங்குவதில் சிரமம் ஏற்படும்

டிஸ்ஃபேஜியா எனப்படுவது விழுங்குவதில் இருக்கும் சிரமம் ஆகும். நாம் எந்த ஒரு உணவையாவது உண்டால் அதை விழுங்கும் பொழுது சிறிது சிரமம் ஏற்படும். இதுவும் நுரையீரல் புற்றுநோயிக்கான அறிகுறியாகும். அதாவது புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியால் உணவுப் பாதையில் தடை ஏற்படுகிறது. இது வாய்ப்புற்று நோய், தொண்டை புற்றுநோய், மெலனோமா போன்றவற்றின் அறிகுறியாகும்.

அறிகுறி 3

தெடர்ச்சியான நெஞ்சு வலி ஏற்படும்

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படும். அதாவது புற்றுநோய் கட்டிகள் மார்பில இறுக்கத்தை ஏற்படுத்தும். மற்றும் நரம்புகளை அழுத்தம் செய்யும். அவ்வாறு செய்யும்போது மார்பில் அதாவது நெஞ்சில் வலி ஏற்படும். அது மட்டுமில்லாமல் ஆழமாக சுவாசிக்கும்போது இருமல், சிரிக்கும் பொழுது வலி ஏற்படும். மார்பு வலி அதாவது நெஞ்சு வலி என்பது பல ஆபத்தான நோய்களின் அறிகுறியாக இருக்கும். குறிப்பாக சொல்லப்போனால் அது மாரடைப்பின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

அறிகுறி 4

கரகரப்பான குரல் வளம்

புற்றுநோயானது குரல்வளையின் நரம்புப் பகுதியை அழுத்தும் பொழுது கரகரப்பான குரல் ஏற்படும். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குரல் கரகரப்பாக இருப்பதற்கு காரணம் நாள்பட்ட இருமல் மற்றும் புற்றுநோய்க் கட்டிகள் குரல் நாண்களில் குறுக்கிடுவதும் ஆகும்.

அறிகுறி 5

முகம் மற்றும் கழுத்தில் வீக்கம்

கழுத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் முகத்தில் இருக்கும் வீக்கம் நுரையீரல் புற்றுநோய் இருப்பதற்கான மற்றொரு அறிகுறி. நுரையீரலில் இருக்கும் புற்றுநோயின் வளர்ச்சியானது வேனா காவாவிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுக்கின்றது. அவ்வாறு இந்த இரத்த ஓட்டமானது தடுக்கப்படும் பொழுது முகம் மற்றும் கழுத்து வீக்கமடைகிறது. இதை உயர் வேனா காவா என்று கூறலாம்.