பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!!

0
159
#image_title

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!!

வருகின்ற ஞாயிற்று கிழமை காலை 11 முதல் மறுநாள் திங்கட்கிழமை வரை பங்குனி உத்திரம் இருக்கிறது.இந்த நாள் முருகனுக்கு உகந்த நாள் ஆகும்.மாலை போட்டுக் கொண்டு பிரசித்த பெற்ற முருகன் கோயிலுக்கு செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இந்த நன்னாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டு வந்தால் கோடி நன்மைகள் உண்டாகும்.அதேபோல் அவரவர் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டால் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.

மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.இல்லையென்றால் விசேஷ நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

இங்கு பலர் தங்களது குலதெய்வத்தையே மறந்து விட்டனர்.குலதெய்வ வழிபாட்டை மறந்தால் அவரின் சாபம் உங்கள் தலைமுறையை தொடரும்.

இந்த பங்குனி உத்திரத்தில் குலதெய்வத்தை பூஜை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கி தொழில் நல்ல வளர்ச்சியடைய முடியும்.

நம் கும்பத்தினர் நோய் நொடியின்றி வாழ இந்த நன்னாளில் குலதெய்வத்திற்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.