கரூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த மனைவி செய்த காரியம்! அப்பகுதியில் பரபரப்பு!

0
100
In Karur district, the wife who separated from her husband did what she did! Excitement in the area!
In Karur district, the wife who separated from her husband did what she did! Excitement in the area!

கரூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த மனைவி செய்த காரியம்! அப்பகுதியில் பரபரப்பு!

கரூர் மாவட்டம் கரூர் அருகே உள்ள அரசு காலணி பகுதிக்கு உட்பட்ட கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (37). இவர் டெக்ஸ்டைல்சில் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய கணவர் பெருமாள். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி கடந்த சில மாதங்களாகவே துக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது புவனேஸ்வரி தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இந்த தற்கொலை குறித்து வெங்கமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அந்த தகவலின் பேரில்  புவனேஸ்வரி வீட்டிற்கு வந்த வெங்கமேடு போலீசார் அவரின்  உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

author avatar
Parthipan K