சென்னிமலை அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளை!. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

0
102
A house was broken into and robbed in broad daylight near Chennimalai! The people of the area are in a frenzy!
A house was broken into and robbed in broad daylight near Chennimalai! The people of the area are in a frenzy!

சென்னிமலை அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளை!. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

ஈரோடு மாவட்டம் பெருந்துறையடுத்த சென்னிமலை அருகே பூட்டிய வீட்டின்  கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலையிலுள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன்.

இவருடைய வயது 58. இவரது மனைவி விஜயகுமாரி.இவர்கள் இருவரும் பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களின் நேரம் சரியில்லாத காரணத்தினால் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் இவரது வீட்டை விஜயகுமாரின் தம்பி கிருஷ்ணமூர்த்தி பாதுகாத்து வருகின்றார். இந்த வீட்டின் அருகே ஒட்டி விநாயகர் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் பூஜை செய்வதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் வந்துள்ளார்.

சந்தானகிருஷ்ணனின் வீட்டின் முன்புற கதவு உடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கொடுத்தார். அலறியடித்து  ஓடி வந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது  வீட்டிலிருந்த  பீரோவில் வைக்கப்பட்டிருந்த இருபது ரூபாய் ரொக்க பணம் 3 மூக்குத்திகள் 10 ராசி கற்கள் உட்பட பல பொருட்கள் திருடு போனது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அவர் சென்னிமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சென்னிமலை போலீசார் கொள்ளையடித்தவர்களை தேடி வருகின்றனர்.பட்ட பகலில் இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K