வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..!

0
218
#image_title

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..!

1)வீட்டில் கெட்ட காரியங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். கண்டதை நினைத்து வருந்தக் கூடாது.

2)அடுத்த வீட்டு விஷயங்களை நம் வீட்டில் உரையாடக் கூடாது. கெட்ட வார்த்தைகளை பேசக் கூடாது.

3)வீட்டில் பொருட்களை அலங்கோலமாக வைக்கக் கூடாது. வீட்டு தரையில் அழுக்கு படிந்து இருக்கக் கூடாது.

4)வீட்டு பூஜை அறையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நலன் பலன் கிடைக்கும்.

5)வீட்டில் குங்குமம், அரிசி, பருப்பு எப்பொழுதும் நிரம்பி இருக்க வேண்டும். பூஜை அறையில் உப்பு வைத்து வழிபட்டு வர வேண்டும்.

6)வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். கோலத்திற்கு நடுவில் சாணப் பிள்ளையார் அல்லது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும்.

7)பூஜை அறையில் ஏலக்காய், பச்சை கற்பூரம் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

8)உப்பு தீபம் ஏற்றி வந்தால் கோடி பலன்கள் கிடைக்கும். உப்பை வெள்ளிக்கிழமை நாளில் வாங்கி வந்தால் பண வரவு அதிகரிக்கும்.