அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த இந்தியா!

0
91

இந்திய ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் தர ஒரு காலத்தில் அமெரிக்கா மறுத்ததையும் நமக்கு உதவ முன் இருந்த ரஷ்யாவுக்கு தடை விதித்ததையும் தன்னுடைய பேச்சிலும் மறைமுகமாக சுட்டிக் காட்டிய பிறந்தநாள் நரேந்திர மோடி இன்று ஒரே சமயத்தில் 36 செயற்கைக்கோள்களை ஏவி நான் கரம் வைத்து சாதித்ததை பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நம்முடைய விமானப்படை வீரர்களின் போக்குவரத்துக்கு ஆவ்ரோ 748 வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த வகை விமானங்கள் 1960 களில் கொள்முதல் செய்யப்பட்டவை. இதனை தொடர்ந்து அந்த விமானங்களை ஓரங்கட்டி விட்டு புதிய நவீன போக்குவரத்து விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்காக ஐரோப்பிய நாடான ஸ்பெயினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏர்ப்ஸ் நிறுவனத்தின் சி 295 ரக விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 21 ஆயிரத்து 935 கோடி ரூபாய் மதிப்பில் 56 விமானங்களை வாங்க சென்ற வருடம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் படி நான்கு வருடங்களுக்குள் 16 விமானங்கள் நம் வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர் மீதமுள்ள 40 விமானங்கள் நம்முடைய நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளனர். இதற்காக அந்த நிறுவனம் நம்முடைய நாட்டைச் சார்ந்த டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த விமான தயாரிப்பு தொழிற்சாலை குஜராத்தின் வதோதராவில் உருவாகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, உலகின் மிக முக்கிய உற்பத்தி மையமாக நம்முடைய நாடு மாறி வருகிறது. மத்திய அரசின் கொள்கைகள் நிலையானதாகவும் கணிக்க கூடியதாகவும், எதிர்காலம் சார்ந்ததாகவும் உள்ளதால் நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களில் புதிய சகாப்தம் எழுதப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இன்று புதிய சிந்தனை மற்றும் புதிய பணி சூழலுடன் நாம் பணிபுரிந்து வருகிறோம். ராணுவ போக்குவரத்து விமான தயாரிப்பில் மிகப்பெரிய உற்பத்தியாளராக நாம் உருவெடுக்க இருக்கின்றோம். நம்முடைய நாட்டிலேயே பயணியர் விமானங்களும் தயாரிக்கப்படும் நாட்களை இப்போதே என்னால் உணர முடிகிறது. வதோதராவில் உருவாகும் இந்த விமான தொழிற்சாலையால் நம்முடைய ராணுவம் வலிமை பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், குஜராத் முதலமைச்சர் பூபேந்தர் படேல், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தலைவர் என். சந்திரசேகரன், ஏர்பஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி குய்லாம்பௌரி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

இதற்கு நடுவே மங்கி பார்த்து எனப்படும் மாதாந்திர மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது ஒரே சமயத்தில் 36 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீபாவளி நேரத்தில் சிறப்பு பரிசாகவும் அது அமைந்தது இதன் மூலமாக டிஜிட்டல் தொடர்புகள் நம்முடைய நாட்டில் மேம்படும். நாட்டில் இருக்கின்ற மிகவும் உள்ளடங்கிய பகுதிகளுக்கு கூட தரமான தகவல் தொடர்பு வசதிகள் கிடைக்கும். நாம் சுயசார்பு இந்தியாவாக உருவாகி வருவதற்கு இதுவே மிக சிறந்த உதாரணம். நாம் சுயசார்பு நிலையை அடைந்து விட்டால் பல்வேறு உயரங்களை தொட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

விண்வெளி துறையில் கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் ஒரு காலத்தில் நமக்கு மறுக்கப்பட்டது. ஆனால் நாம் விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினர். இதன் உதவியுடன் ஒரே சமயத்தில் ஏராளமான செயற்கைக்கோள்களை நாம் ஏவி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

விண்வெளி துறையின் சர்வதேச வர்த்தக சந்தையில் நாம் வலுவான நாடாக உருவெடுத்து வருகின்றோம். இது நமக்கு பல்வேறு வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது. விண்வெளி துறையில் தனியாரும் பங்களிப்பு தர அனுமதித்த பிறகு ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முளைத்துள்ளனர். இதன் மூலமாக இந்த துறையில் புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்க இயலும்.

எதிரவரும் 2047 ஆம் ஆண்டில் நாம் மலர்ந்த நாடாக உருவெடுக்க உழைத்து வருகிறோம். எல்லோரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று அவர் பேசினார்.