இதற்காக ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நன்றி தெரிவித்த இந்தியா!

0
125

இதற்காக ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நன்றி தெரிவித்த இந்தியா!

ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடங்கியது. இந்த போரில் ரஷியா உக்ரைன் மீது மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரினால் உள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உக்ரைனில் சிக்கி கொண்டனர்.

அந்த வகையில், இந்தியர்கள் உள்பட இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். எனவே, அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வருவதற்காக மத்திய அரசு ‘ஆபரேசன் கங்கா’ என்னும் நடவடிக்கையை தொடங்கியது. இதன் மூலம் உக்ரைனில் சிக்கி இருந்த 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

உக்ரைனில் சிக்கி இருந்த இந்தியர்கள் உள்பட இந்திய மாணவர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேசன் கங்கா’ நடவடிக்கை சிறப்பாக முடிக்கப்பட்டது. குறிப்பாக உக்ரைனின் வடகிழக்கு நகரான சுமியில் இருந்து இந்திய மாணவர்களை மீட்பது மிகவும் சவாலாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக ‘ஆபரேசன் கங்கா’ நடவடிக்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். முக்கியமாக உக்ரைன், ரஷியா மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு நன்றி. உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, சுலோவாக்கியா, மால்டோவா ஆகிய நாடுகளும் அசாதாரண உதவியை அளித்தன. அவற்றுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

மீட்பு நடவடிக்கையில் அயராது உழைத்த அரசு சாரா நிறுவனங்கள், நமது விமான போக்குவரத்து நிறுவனம் மற்றும் இந்திய விமான படைக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K