இப்படியும் பந்து விசியதா இந்திய அணி?

0
80

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் சிவம் துபே நீக்கப்பட்டு அருகில் தாகூர் சேர்க்கப்பட்ட டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முதலில் இந்தியாவை பேட் செய்ய கேட்டுக்கொண்டார்.

இதன்படி ரோஹித் சர்மாவும் களம் இறங்கினர். பேட்டிங்கில் சாதகமான பிச் என்பதால் ராகுலும், ரோகித் சர்மாவும் வெஸ்ட்இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கினர் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினர், ரோகித் சர்மா தனது 28வது சாதத்தையும் கேஎல் ராகுல் தனது மூன்றாவது சதத்தையும் அடித்தனர்.

அணியின் ஸ்கோர் 227 ரன்கள் ஆக இருந்த பொழுது கேஎல் ராகுல் 102 ரன்களில் அவுட்டானார் இதில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர் அடங்கும்.

அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
சதம் அடித்த பிறகு ரோகித் சர்மா ரன் மழை பொழிந்தார் நான்காவது இரட்டை சதத்தை அடிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் ஆனால் துரதிஷ்டவசமாக 44 வது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்பு ஸ்ரேயஸ் அவருடன் பண்ட் ஜோடி இறுதி ஓவர்களை சிக்ஸர்களும் பவுண்டரிகள் தெறிக்கவிட்டது. இவர்களின் அதிரடி ஆட்டத்தில் இந்தியா 380 ரன்களை தாண்டியது 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது கடைசி பத்து ஓவர்களில் இந்திய அணி 127 ரன்களை சேகரித்து குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அடுத்து மிக இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது முந்தைய ஆட்டத்தின் ஹீரோ ஹெட்மயர் 4 ரன்களில் ரன் அவுட் ஆனது இந்திய அணியினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது 86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் விக்கெட் கீப்பர் ஹோப்ஸ், பூரான் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இந்தியாவின் பில்டிங் மெச்சும்படியாக இல்லை ஹோப்ஸ் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே ஸ்லிப்பில் நின்ற ராகுல் வாய்ப்பை வீணடித்தால் பூரான் 22 ரன்னில் இருந்த போது தூக்கி அடித்த பந்து தீபக் சாகர் தவற விட இதன் காரணமாக இவர்கள் இருவரும் கொஞ்ச நேரம் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் இந்தியா பக்கம் ஆட்டம் திரும்பியது இந்திய அணியின் இடக்கை பந்துவீச்சாளர் குலதீப் யாதவ் ஹாட்ரிக் சாதனையையும் நிகழ்த்தினார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.1 ஓவர்களில் 280 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதனால் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 22-ஆம் தேதி கட்டாக்கில் நடக்கிறது.