தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!

0
123

தூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!

தினமும் ஏதேனும் ஒரு வகையில் சிறுதானிய உங்களை நாம் எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் உள்ளது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

ஊட்டச்சத்து நிறைந்தது: நம் உடலில் சரியான செயல்பாட்டிற்கு தேவையான பல ஆரோக்கியமான சத்துக்களை கொண்டதுதான் சிறுதானியம் . மேலும் இவை ரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் ரத்த ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்க உதவும் இரும்புச் சத்து மற்றும் செம்பு ஆகிய சத்துக்கள் நிறைந்த உள்ளது. மேலும் சிறுதானியங்களில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. இந்த தாதுக்கள் அனைத்தும் தாவர ஊட்டச்சத்துடன் சேரும் பொழுது நம் உடலில் உள்ள அனைத்து வகையான நோய்களும் குணமடைகிறது.

விரைவான உடல் எடை குறைய:

சிறுதானியங்கள் டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலத்தை கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையை குறைத்து நம் உடலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் டிரிப்டோபான் மூலம் உணவு செரிமானத்தை மெதுவாக வேகத்தில் நடத்துகிறது. இதன் மூலம் நீண்ட காலத்திற்கு வயிற்றினை முழுமையாக வைத்திருக்க உதவும்.

தூக்கமின்மையை குறைக்கிறது:

சிறு தானியங்களில் உள்ள டிரிப்டோபான் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. செரோபோனின் அளவை அதிகப்படுத்துகிறது அதனால் ஒவ்வொரு இரவும் சிறுதானியங்களால் செய்யப்படும் உணவுகளை சாப்பிட வேண்டும். அதன் மூலம் ஒழியற்ற மற்றும் அமைதியான தூக்கத்தினை பெற முடியும்.

author avatar
Parthipan K