உங்கள் வீட்டில் எலி தொல்லையா? அதிலிருந்து விடுபட இந்த ஒரு இலை போதும்!!

0
125

உங்கள் வீட்டில் எலி தொல்லையா? அதிலிருந்து விடுபட இந்த ஒரு இலை போதும்!!

பலரது வீட்டிலும் எலி கரப்பான் பூச்சி போன்றவைகளின் தொல்லை அதிகமாக இருக்கும். அதைக் கொல்லும் அளவிற்கு மருந்து வாங்கி வைத்தாலும் அதனை சாப்பிட்டுவிட்டு எங்கேயாவது இறந்து துர்நாற்றத்தை தான் ஏற்படுத்தும். பலரும் அதனை யோசித்து எலி மறுத்து வைப்பதை விரும்புவதில்லை. பல வழிகளில் அதனை துரத்த பலவற்றை செய்து பார்த்திருப்பார்கள்,ஆனால் அவர்களுக்கு எதுவும் உதவியாக இருக்காது.

இதனை ஒரு முறை செய்தால் போதும் வீட்டில் எலிகள் தொல்லையே இருக்காது. சிறிதளவு எருக்கம் செடி இலைகளை பறித்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள  எருக்கம் பூ மற்றும் மற்றும் இலையை தனி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஓர் உரலில் போட்டு தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு இந்த தட்டி வைத்திருப்பதை எலிகள் வரும் பகுதியில்(எலிகள் உள்ள இடம்) வைத்து விட வேண்டும். எலிகளுக்கு இதனுடைய வாசனை அறவே பிடிக்காது. அதனால் உங்களது வீட்டில் உள்ள எலிகள் அனைத்தும் வெளியேறிவிடும். இதனை செய்தால் உங்கள் வீட்டில் எலி சம்பந்தமான தொல்லைகள் இருக்காது.