தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

0
77
Jewelery stolen from a woman standing in front of her house in Thoothukudi district! The people of the area in fear!
Jewelery stolen from a woman standing in front of her house in Thoothukudi district! The people of the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி நந்தினி (28). நந்தினி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தாளமுத்துநகர் ராமதாஸ் நகரச் சேர்ந்த முத்து முகமது மகன் நாகூர் மீரான் (22) என்பவர் நந்தினி களத்தில் இருந்த  மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

அப்போது அக்கம்பக்கத்தினர் நாகூர் மீரானை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நந்தினி தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில்  புகார் அளித்தார். அந்த  புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து நாகூர் மீரானை கைது செய்தார். அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள மூணு பவுன் தங்கச் சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிள்  போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர் தனியாகத்தான் திருட்டு சம்பவத்தில்  ஈடுபட்டு வருகிறாரா அல்லது நண்பர்கள் யாராவது உடன் இருக்கிறார்களா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்கு முன்பு  நின்று கொண்டிருந்த பெண்ணின் தங்கசங்கலியை திருடர்கள் பறித்துக் கொண்டு போன சம்பவம் அப்பகுதியில்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K