டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.60000 ஊதியம் வழங்கப்படும்!!

0
167
#image_title

டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.60000 ஊதியம் வழங்கப்படும்!!

தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள மெடிக்கல் ஆபிஸர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.டிகிரி முடித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (செங்கல்பட்டு)

பணி: மெடிக்கல் ஆபிஸர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வித் தகுதி: மெடிக்கல் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் MBBS,GNM ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.60,000/- ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மெடிக்கல் ஆபிஸர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-03-2024